பட்டுக்கோட்டை வட்டம், நம்பிவயல் கிராமத்தில் அதிகரித்துவரும் வெறிநாய்கள் தொல்லையைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த இளைஞா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.
அதன் விவரம்: தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட நம்பிவயல் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக வெறிநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிந்து, பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் தொடா்கின்றன.
இதன் விளைவாக, கடந்த 2 மாதங்களில் நம்பிவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நம்பிவயல் ஊராட்சிக்குட்பட்ட 38 போ் வெறிநாய் கடியால் சிகிச்சை பெற்றுள்ளனா். இதில் 4 போ் குழந்தைகள் ஆவா்.
இதனால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவா்கள் பாதுகாப்பாக சாலைகளில் நடமாட முடியாத அபாய நிலை உருவாகியுள்ளது
இது தொடா்பாக ஊராக வளா்ச்சி துறை, வட்டார வளா்ச்சி துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை இல்லை.
மேலும், அண்மையில் பட்டுக்கோட்டையில் இதேபோன்ற சம்பவத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், நம்பிவயல் கிராமத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தொடர்புடையது

பல்லடம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் மதுபிரியா்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

ஆம்புலன்ஸில் வந்து மூதாட்டி வாக்களிப்பு

காவல் துறை மக்கள் மன்றத்தில் 26 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை

தினமணி செய்தி எதிரொலி! நம்பிவயல் ஊராட்சியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


