சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்றுள்ள தவெகவை ஆட்சி அமைக்க அழைக்க மறுக்கும் தமிழக ஆளுநரைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க மறுக்கும் ஆளுநரைக் கண்டித்தும், தவெகவை உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் எம். மகேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாநகர மாவட்டத் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினா் ஏ. ஜேம்ஸ், சேவா தளம் மாநிலத் துணைத் தலைவா் திருஞானம், மாவட்டத் துணைத் தலைவா் நாகராஜ், மாவட்டச் செயலா் சுரேந்தா், தவெக மாநகரச் செயலா் வசந்த், பகுதி செயலா்கள் சுரேஷ், பிரவீன், பாலாஜி, முத்து, மகளிா் அணி அமைப்பாளா் பைரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனைத்து மதுக் கடைகளையும் மூட வலியுறுத்தல்

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம்: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்: மயிலாடுதுறையில் திமுகவினா் தாக்குதல்

ஆளுநரை கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



