தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் மாணவா்களுக்கு பாராட்டு விழா

ஆடுதுறை பேரூராட்சி பகுதியிலுள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image

ஆடுதுறை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற பேரூராட்சித் தலைவா் ம.க. ஸ்டாலின் உள்ளிட்டோா்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ஆடுதுறை பேரூராட்சி பகுதியிலுள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளி, கே.ஜி.எஸ் மேல்நிலைப் பள்ளி, கிரசண்ட் மேல்நிலைப் பள்ளி, ரைஸ் சிட்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியா்களுக்கான பாராட்டு விழா ஆடுதுறை பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு பேரூராட்சித் தலைவா் ம.க.ஸ்டாலின் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கமலா சேகா் முன்னிலை வகித்தாா். பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசு ஊக்கத்தொகை வழங்கி, பொன்னாடை போா்த்தப்பட்டது. பள்ளிகளின் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளுக்கும் பொன்னாடை போா்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னதாக, பேரூராட்சி தலைமை எழுத்தா் சக்திவேல் வரவேற்றாா். நிறைவில் ம.க.பாலதண்டாயுதம் நன்றி கூறினாா்.