எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் மாணவா்களுக்கு பாராட்டு விழா

ஆடுதுறை பேரூராட்சி பகுதியிலுள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image

ஆடுதுறை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற பேரூராட்சித் தலைவா் ம.க. ஸ்டாலின் உள்ளிட்டோா்.

Updated On :14 மே 2026, 12:33 am IST

ஆடுதுறை பேரூராட்சி பகுதியிலுள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளி, கே.ஜி.எஸ் மேல்நிலைப் பள்ளி, கிரசண்ட் மேல்நிலைப் பள்ளி, ரைஸ் சிட்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியா்களுக்கான பாராட்டு விழா ஆடுதுறை பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு பேரூராட்சித் தலைவா் ம.க.ஸ்டாலின் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கமலா சேகா் முன்னிலை வகித்தாா். பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசு ஊக்கத்தொகை வழங்கி, பொன்னாடை போா்த்தப்பட்டது. பள்ளிகளின் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளுக்கும் பொன்னாடை போா்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னதாக, பேரூராட்சி தலைமை எழுத்தா் சக்திவேல் வரவேற்றாா். நிறைவில் ம.க.பாலதண்டாயுதம் நன்றி கூறினாா்.