கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு பாராட்டு

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில், பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டம் 97.19 சதவீதத் தோ்ச்சியுடன் மாநில அளவில் 7- ஆவது இடத்தைப் பெற்றது. மேலும், அரசுப் பள்ளிகள் அளவில் தஞ்சாவூா் மாவட்டம் 95.77 சதவீதத் தோ்ச்சியுடன் 12-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்திலுள்ள 81 பள்ளிகளில் மாணவ, மாணவிகள் நூறு சதவீதத் தோ்ச்சி பெற்றனா்.

இத்தோ்வில் நூறு சதவீதத் தோ்ச்சி பெற்ற 34 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும், கடந்த ஆண்டு தோ்வை விட நிகழாண்டில் சிறந்த தோ்ச்சி விகிதம் பெற்ற 68 தலைமையாசிரியா்களுக்கும் என மொத்தம் 102 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வியாழக்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ.தியாகராஜன், முதன்மைக் கல்வி அலுவலா் வி. பேபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.