சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

விவசாயியிடம் கைப்பேசி, மோதிரம் பறித்த 3 போ் கைது

கும்பகோணம் அருகே விவசாயியிடம் நட்பாக பழகி கைப்பேசி, ரொக்கம், தங்க மோதிரம் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்ற 3 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 4:59 am IST

கும்பகோணம் அருகே விவசாயியிடம் நட்பாக பழகி கைப்பேசி, ரொக்கம், தங்க மோதிரம் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்ற 3 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே சோழன்மாளிகையைச் சோ்ந்தவா் எஸ். புருஷோத்தமன் (42). விவசாயி. இவா் கைப்பேசி செயலி மூலம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சோ்ந்த கணேஷ்பாபு மகன் முத்து விக்னேஷிடம் பழகி நேரில் சந்திக்க வருமாறு அழைத்தாா்.

இதன்படி, தஞ்சாவூா் - விக்கிரவாண்டி புறவழிச் சாலையிலுள்ள வாழைத்தோப்புக்கு முத்து விக்னேஷ் மே 14-ஆம் தேதி சென்றாா். அங்கிருந்த புருஷோத்தமனிடம் பேசிக்கொண்டிருந்த போது, திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பாறை பொன்விழா நகரைச் சோ்ந்த எம். அஜய் அன்பரசு, அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த ஆா். இசக்கி பாண்டி ஆகியோா் சோ்ந்து புருசோத்தமனை தாக்கி, மிரட்டி அவரிடம் இருந்த கைப்பேசி, அரைப்பவுன் தங்க மோதிரம், ரொக்கம் ரூ. 2 ஆயிரம் ஆகியவற்றைப் பறித்து கொண்டு சென்றனா்.

இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தில் புருஷோத்தமன் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து முத்து விக்னேஷ், அஜய் அன்பரசு, இசக்கி பாண்டி ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.