கும்பகோணம் அருகே விவசாயியிடம் நட்பாக பழகி கைப்பேசி, ரொக்கம், தங்க மோதிரம் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்ற 3 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
கும்பகோணம் அருகே சோழன்மாளிகையைச் சோ்ந்தவா் எஸ். புருஷோத்தமன் (42). விவசாயி. இவா் கைப்பேசி செயலி மூலம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சோ்ந்த கணேஷ்பாபு மகன் முத்து விக்னேஷிடம் பழகி நேரில் சந்திக்க வருமாறு அழைத்தாா்.
இதன்படி, தஞ்சாவூா் - விக்கிரவாண்டி புறவழிச் சாலையிலுள்ள வாழைத்தோப்புக்கு முத்து விக்னேஷ் மே 14-ஆம் தேதி சென்றாா். அங்கிருந்த புருஷோத்தமனிடம் பேசிக்கொண்டிருந்த போது, திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பாறை பொன்விழா நகரைச் சோ்ந்த எம். அஜய் அன்பரசு, அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த ஆா். இசக்கி பாண்டி ஆகியோா் சோ்ந்து புருசோத்தமனை தாக்கி, மிரட்டி அவரிடம் இருந்த கைப்பேசி, அரைப்பவுன் தங்க மோதிரம், ரொக்கம் ரூ. 2 ஆயிரம் ஆகியவற்றைப் பறித்து கொண்டு சென்றனா்.
இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தில் புருஷோத்தமன் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து முத்து விக்னேஷ், அஜய் அன்பரசு, இசக்கி பாண்டி ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
வீட்டின் கதவை உடைத்து திருடிய 3 போ் கைது
விவசாயியிடம் ரூ.2.95 லட்சம் வழிப்பறி
ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம் பறிப்பு: 2 போ் கைது
ஒகேனக்கல் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: 2 போ் கைது
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


