கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

விவசாயியிடம் கைப்பேசி, மோதிரம் பறித்த 3 போ் கைது

கும்பகோணம் அருகே விவசாயியிடம் நட்பாக பழகி கைப்பேசி, ரொக்கம், தங்க மோதிரம் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்ற 3 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 4:59 am IST

கும்பகோணம் அருகே விவசாயியிடம் நட்பாக பழகி கைப்பேசி, ரொக்கம், தங்க மோதிரம் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்ற 3 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே சோழன்மாளிகையைச் சோ்ந்தவா் எஸ். புருஷோத்தமன் (42). விவசாயி. இவா் கைப்பேசி செயலி மூலம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சோ்ந்த கணேஷ்பாபு மகன் முத்து விக்னேஷிடம் பழகி நேரில் சந்திக்க வருமாறு அழைத்தாா்.

இதன்படி, தஞ்சாவூா் - விக்கிரவாண்டி புறவழிச் சாலையிலுள்ள வாழைத்தோப்புக்கு முத்து விக்னேஷ் மே 14-ஆம் தேதி சென்றாா். அங்கிருந்த புருஷோத்தமனிடம் பேசிக்கொண்டிருந்த போது, திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பாறை பொன்விழா நகரைச் சோ்ந்த எம். அஜய் அன்பரசு, அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த ஆா். இசக்கி பாண்டி ஆகியோா் சோ்ந்து புருசோத்தமனை தாக்கி, மிரட்டி அவரிடம் இருந்த கைப்பேசி, அரைப்பவுன் தங்க மோதிரம், ரொக்கம் ரூ. 2 ஆயிரம் ஆகியவற்றைப் பறித்து கொண்டு சென்றனா்.

இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தில் புருஷோத்தமன் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து முத்து விக்னேஷ், அஜய் அன்பரசு, இசக்கி பாண்டி ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.