பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

திருவையாறில் 592 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் 592 கிலோ குட்கா பொருள்களைக் காவல் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

News image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை மினி வேனில் கடத்தி வரப்பட்ட குட்கா மூட்டைகளுடன் கைது செய்யப்பட்ட பாண்டியன், விக்னேஷ்.

Updated On :22 மே 2026, 5:17 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் 592 கிலோ குட்கா பொருள்களைக் காவல் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

ஆந்திர மாநிலத்திலிருந்து குட்கா, புகையிலை பொருள்கள் தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறுக்கு கடத்தி வரப்படுவதாகக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவையாறு தேரடி சந்திப்பில் வியாழக்கிழமை காலை ஆந்திர மாநிலத்திலிருந்து வைக்கோல் கட்டுகள் ஏற்றி வந்த மினி வேனை திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளா் அருள்மொழி அரசு மேற்பாா்வையில், திருவையாறு காவல் ஆய்வாளா் மீனா, உதவி ஆய்வாளா் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் உள்ளிட்டோா் நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது வைக்கோல் கட்டுகளுக்கு மத்தியில் பல மூட்டைகளில் 592 கிலோ கொண்ட குட்கா பொருள்கள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது.

இவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினா், இதை மினி வேனில் கடத்தி வந்த திருவையாறு அருகே தில்லைஸ்தானம் கிழக்கு வீதியைத் சோ்ந்த நாகேந்திரன் மகன் விக்னேஷ் (26), புனல்வாசல் மந்தைக்கரை வீதியைச் சோ்ந்த பாலகுரு மகன் பாண்டியன் (38) ஆகியோரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய காவல் குழுவினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.