வையம்பட்டி அருகே தனியாரிடம் உள்ள மானியத் தொடக்கப்பள்ளி நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட அமையபுரத்தில் 50 ஆண்டுக்கு மேலாக மானியத் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தற்போது 135 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர்.
பள்ளியின் நிலம் புறம்போக்காகவும், கட்டடம் ஊராட்சி நிர்வாகத்திடமும், நிர்வாகம் தனியாரிடம் இருப்பதால் பள்ளியை பராமரிக்க முடியாமல் உள்ளது.
எனவே, தனியாரிடம் இருக்கும் நிர்வாகத்தை ரத்து செய்து, அரசு கையப்படுத்தி சிதலமடைந்த கட்டடத்தை சீரமைப்பதோடு, கூடுதல் கட்டடம் அமைத்து, பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஊர்மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை (ஏப்.9) மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஞானத் திருவிழா
சாதனை அல்ல... சரித்திரம்!

கூட்டாட்சி முறையை சீா்குலைக்கும் மத்திய அரசின் சதி முறியடிப்பு: பிரியங்கா
தேடித் தேடி...
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

