வையம்பட்டி அருகே தனியாரிடம் உள்ள மானியத் தொடக்கப்பள்ளி நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட அமையபுரத்தில் 50 ஆண்டுக்கு மேலாக மானியத் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தற்போது 135 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர்.
பள்ளியின் நிலம் புறம்போக்காகவும், கட்டடம் ஊராட்சி நிர்வாகத்திடமும், நிர்வாகம் தனியாரிடம் இருப்பதால் பள்ளியை பராமரிக்க முடியாமல் உள்ளது.
எனவே, தனியாரிடம் இருக்கும் நிர்வாகத்தை ரத்து செய்து, அரசு கையப்படுத்தி சிதலமடைந்த கட்டடத்தை சீரமைப்பதோடு, கூடுதல் கட்டடம் அமைத்து, பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஊர்மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை (ஏப்.9) மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் பல்கலை.யில் அட்டகாசம்: கண்ணில் படுவோரை கடித்து குதறும் அணில்!
ரஜினி - 173 படத்திலிருந்து விலகியது ஏன்? சுந்தர். சி விளக்கம்!

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா!
வீடியோக்கள்

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

