ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மானியத் தொடக்கப்பள்ளியை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க முடிவு

வையம்பட்டி அருகே தனியாரிடம் உள்ள மானியத் தொடக்கப்பள்ளி நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:39 am

வையம்பட்டி அருகே தனியாரிடம் உள்ள மானியத் தொடக்கப்பள்ளி நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட அமையபுரத்தில் 50 ஆண்டுக்கு மேலாக மானியத் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தற்போது 135 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். 
பள்ளியின் நிலம் புறம்போக்காகவும், கட்டடம் ஊராட்சி நிர்வாகத்திடமும், நிர்வாகம் தனியாரிடம் இருப்பதால் பள்ளியை பராமரிக்க முடியாமல் உள்ளது.  
எனவே, தனியாரிடம் இருக்கும் நிர்வாகத்தை ரத்து செய்து, அரசு கையப்படுத்தி சிதலமடைந்த கட்டடத்தை சீரமைப்பதோடு, கூடுதல் கட்டடம் அமைத்து, பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஊர்மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை (ஏப்.9) மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.