குடிநீர் போதிய அளவில் வழங்கக் கோரி துறையூர் ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடத்துடன் சென்ற பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
துறையூர் ஊராட்சி ஒன்றியம் சிங்களாந்தபுரம் ஊராட்சியைச் சேர்ந்தது தெற்கியூர். இந்தக் கிராமத்துக்கு சிங்களாந்தபுரத்திலிருந்து தண்ணீர் பகிர்மானக் குழாய் அமைக்கப்பட்டு நீர் வழங்கப்படுகிறது. தெற்கியூர் கிராம மக்களுக்கு ஊராட்சி சார்பில் அளிக்கப்படுகிற நீரானது போதிய அளவில் இல்லை. இந்நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் சென்று துறையூர் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) சகுந்தலாவை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து தெற்கியூரில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கவும், தெற்கியூரில் குழாய் போடும் பணி முழுமையாக நிறைவடைந்ததும் குடிநீர் பிரச்சினை சீராகும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதைக் கேட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா?

திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலை.யில் சேர ஜூன் 12-ல் நுழைவுத் தேர்வு

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை!

பாரதிராஜாவுக்கு என்னைப் பிடிக்கும்; என் நடிப்பு பிடிக்காது! ரஜினிகாந்த் பேட்டி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


