திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 11 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மணப்பாறை வட்டத்தைச் சேர்ந்த 11 பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோர் மற்றும் விதவை உதவித் தொகையாக தலா ரூ. 1000 வழங்குவதற்கான ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் தா. சாந்தி வழங்கினார்.
இக் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக் கோருதல், பட்டா மாறுதல், சாதி சான்று, இதர சான்றுகள் தொடர்பாக 167 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மேலும், உதவித் தொகை கோரி 36 மனுக்கள், அடிப்படை வசதி கோரி 14 மனுக்கள், புகார் தொடர்பாக 27 மனுக்கள் என மொத்தம் பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய 502 மனுக்கள் பெறப்பட்டு உரிய அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மனுக்கள் மீது காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் தா. சாந்தி அறிவுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






