திருச்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில், 2-ஆவது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்கள், மூலிகைக் கண்காட்சிகள் மற்றும் விழிப்புணர்வு சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
இது குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ். காமராஜ் கூறியது: சித்த மருத்துவத்தை தோற்றுவித்தவர்கள் சித்தர்கள் என போற்றப்படுகிறது. இதில் 18 சித்தர்களில் முதன்மையானவர் அகத்தியர் சித்தரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் அவர் பிறந்த நட்சத்திரமான ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அகத்தியரின் பிறந்த தினத்தை கடந்தாண்டு, தேசிய சித்த மருத்துவ தினமாகக் கொண்டாட மத்திய மாநில அரசுகள் அறிவித்து கொண்டாடி வருகின்றன. அந்த வகையில் நிகழாண்டு 2ஆவது தேசிய சித்தர் தினம் டிசம்பர் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.
அதன்படி, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் உள்ள 124 அரசு சித்த மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 3 வாரங்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள், மூலிகைக் கண்காட்சிகள் மற்றும் சிறப்புச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி புத்தூரில் உள்ள அரசு தலைமை சித்த மருத்துவமனையில், டிசம்பர் 26 முதல் 31 ஆம் தேதி வரையில் தினசரி ஒரு சிறப்பு மருத்துவ முகாம் என்ற வகையில் முகாமுடன் மூலிகைக் கண்காட்சியும் நடைபெறுகிறது.
மேலும் இதே நாளில் திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நோய்களை பற்றிய சிறப்பு விழிப்புணர்வு சொற்பொழிவுகள் மாலை 4 மணிக்கு தொடர்ந்து நடைபெற உள்ளது. மேலும், டிச. 26 ஆம் தேதி முதல் 31 வரை அகில இந்திய வானொலி நிலையத்தில் காலை 11 மணிமுதல் மதியம் 1 மணி வரை உடல் நோய்கள் குறித்த நேயர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் நேரடி நிகழ்ச்சி ஒலிபரப்பாக இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதென்ன அம்புபாச்சி மேளா? எங்கு விசேஷம்? முழு தகவல்!

வாட்ஸ்ஆப் வெப்பில் விடியோ கால், குரூப் வாய்ஸ் அம்சங்கள்!

மொஹரம் பண்டிகை: எழும்பூர் - போத்தனூர் இடையே சிறப்பு ரயில்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


