வையம்பட்டி அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் வீடு திரும்பாததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தனியார் மில் பேருந்துகளை சிறைபிடித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே தண்டல்காரனூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி(18), திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே தனியார் பஞ்சாலையில் வேலை செய்து வந்தார். மில்லுக்கு சொந்தமான பேருந்தில் சனிக்கிழமை காலை வேலைக்குச் சென்ற விஜயலட்சுமி வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து பேருந்து ஓட்டுநரிடம் கேட்டதற்கு, அலட்சியமாக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமியின் உறவினர்கள், கிராம மக்கள் பொன்னம்பலம்பட்டி சுங்கசாவடி பகுதி அருகே 4 மில் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வையம்பட்டி காவல் ஆய்வாளர் அனுஷ்கா மனோகரி, பெண் காணாமல் போன பகுதி வடமதுரை காவல் சரகத்திற்குள்பட்ட பகுதி என்பதால் அங்கு சென்று புகார் அளிக்க அறிவுறுத்தியதின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நகராட்சி ஆணையரை கண்டித்து குழித்துறை நகா்மன்றத்தில் 5 உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்

செய்யூா் வட்ட ஜமாபந்தியில் 73 மனுக்கள் ஏற்பு

வாணியம்பாடியில் ஜமாபந்தி தொடக்கம்: 102 மனுக்கள் ஏற்பு

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி தா்னா போராட்டம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


