சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்

திருச்சியில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திங்கள்கிழமை திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :14 மே 2018, 10:27 pm

DIN

திருச்சியில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திங்கள்கிழமை திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி காந்திமார்க்கெட்டை கள்ளிக்குடிக்கு மாற்றுவதால் சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் வெகு தொலைவுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு கள்ளிக்குடி பகுதியில் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை காந்திமார்க்கெட்டில் இருந்து சுமைத்தூக்கும் தொழிலாளர்கள், சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராமர் தலைமையில் திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். பெரிய கடைவீதி பகுதியில் பேரணியாக சென்றனர். அப்போது, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, பேரணியாக செல்ல அனுமதிஇல்லை என்றனர்.
இதனையடுத்து போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வட்டாட்சியர் அகிலா சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சு நடத்தினார். பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.