போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கொடுமுடி-புகழூர் இடையே பராமரிப்பு பணி: ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்

கொடுமுடி-புகழூர் இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இயங்கும் ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On :14 மே 2018, 10:31 pm

கொடுமுடி-புகழூர் இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இயங்கும் ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பது : கரூர் மாவட்டம் கொடுமுடி-புகழூர் இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதை அடுத்து, செவ்வாய்க்கிழமை (மே 15) முதல் 22 ஆம் தேதி வரையில் இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பாலக்காடு-திருச்சி பயணிகள் ரயில் ( எண் 56712) கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், (ஈரோடு -கரூர் இடையே மாற்றுப்பாதையில் ) கரூர் வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்
பகுதியாக ரத்துசெய்யப்படும் ரயில்கள் : ஈரோடு -நெல்லை பயணிகள் ரயில் (எண்.56825), திருச்சி -ஈரோடு பயணிகள் ரயில்கள் (56841), நெல்லை-ஈரோடு பயணிகள் ரயில்கள் (எண் 56826) ஆகியவை ஈரோடு - கரூர் இடையிலும், ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் (எண் 56846) சேலம்-ஜோலார்பேட்டை இடையிலும் பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
திருச்சி-பாலக்காடு பயணிகள் ரயில் குறிப்பிட்ட இந்த நாள்களில் கரூர் நிலையத்தில் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக இயக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.