மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு  ஆதரவாக நாளை முதல் வேலைநிறுத்தம்: அஞ்சல் ஊழியர் சங்க இணைப்புக் குழு அறிவிப்பு

கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, மே 22 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என

Updated On :21 மே 2018, 2:06 am

கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, மே 22 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என  அஞ்சல் ஆர்எம்எஸ் ஊழியர் சங்கங்களின் இணைப்புக் குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்த  அஞ்சல் ஆர்எம்எஸ் ஊழியர் சங்கங்களின் இணைப்புக் குழு   ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் அண்மையில் நடைபெற்றது.   மாநில முன்னாள் செயலர்  ராஜேந்திரன் தலைமை வகித்தார்.  சங்க நிர்வாகிகள் ஆர்.பி. சுரேஷ், ஜி. கண்ணன், ஆர் தன்ராஜ், விஷ்ணுதேவன், குமரன், ஆர். குமார், எஸ். கோவிந்தராஜ், கே. மருதநாயகம், டி. குணசேகரன், டி.பி. ரமேஷ், பன்னீர்செல்வம், கே. கல்யாணசுந்தரம்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  
கூட்டத்தில் கமலேஷ் சந்திரா கமிட்டி கொண்டு வந்த, கிராமப்புற அஞ்சலக ஊழியர்களுக்கு (ஜிடிஎஸ்) சாதகமான பரிந்துரைகளை உடன் செயல்படுத்த வேண்டும், அஞ்சல் ஊழியர் சரிபார்ப்பை உடனே தொடங்க வேண்டும்  என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மே 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கப்படும் என கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை முதல் போராட்டம் தொடரவுள்ளது.
போராட்டத்தில் திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள, அஞ்சலக முதுகெலும்பாகச் செயல்படும் சுமார் 2.65 லட்சம் கிராப்புற அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறும் வரையில், கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் ஆர்எம்எஸ் சங்க ஊழியர்களும் போராட்டத்தில்  ஈடுபடுகின்றனர் என இணைப்புக் குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.