அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் அக்.12 இல் திருவடி சேவை

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் அக்டோபர் 12 ஆம் தேதி திருவடி சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :8 அக்டோபர் 2018, 8:52 am IST

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் அக்டோபர் 12 ஆம் தேதி திருவடி சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இக்கோயிலின் இணை ஆணையர் பொ. ஜெயராமன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் திருப்பவித்ரோத்ஸவம் சாற்றுமறை முடிந்து, பெரியபெருமாள் திருமேனி முழுவதும் தைலம் சாற்றப் பெற்றது. 
தற்போது பெரியபெருமாள் திருமேனி தைலக்காப்பு முழுவதும் நன்குகாய்ந்துவிட்டதால்,  அக்டோபர் 12 ஆம் தேதி  ( வெள்ளிக்கிழமை) புணுகு காப்பு சாற்றி, கவசங்கள் மற்றும் அலங்காரம் செய்வித்து, பிற்பகல் 3.30 மணி முதல் திருவடி சேவை செய்விக்கப்பட உள்ளது. எனவே பக்தர்கள் திருவடி சேவையைத் தரிசிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.