பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1959ஆம் ஆண்டு, இந்திய எல்லையோரத்தில் லடாக் பகுதியில் நடந்த சீனப்படையின் தாக்குதலின்போது, காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் வீரமரணம் அடைந்தனர். அதனை நினைவு கூறும் வகையில் ஆண்டதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர்கள் வீர வணக்க தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில், பணியின் போது மரணமடைந்த காவல்துறை மற்றும் காவல் படையைச் சேர்ந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள உயிர்நீத்தோர் நினைவுத்தூணுக்கு மத்திய மண்டல (திருச்சி) காவல்துறைத் தலைவர் வரதராஜூ, துணைத் தலைவர் லலிதா லட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், மாநகர காவல் ஆணையர் அ. அமல்ராஜ், துணை ஆணையர்கள் மயில்வாகனன், நிஷா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காவல் படை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி மற்றும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவைத் தேர்தல்! நச்சென பிரசாரத்தை நிறைவு செய்யப்போவது யார்?
திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்!

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

