சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

திருச்சியில் வீரவணக்க நாள்

பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On :22 அக்டோபர் 2018, 4:17 am

பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1959ஆம் ஆண்டு, இந்திய எல்லையோரத்தில் லடாக் பகுதியில் நடந்த சீனப்படையின் தாக்குதலின்போது,  காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் வீரமரணம் அடைந்தனர். அதனை நினைவு கூறும் வகையில் ஆண்டதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர்கள் வீர வணக்க தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில், பணியின் போது மரணமடைந்த காவல்துறை மற்றும் காவல் படையைச் சேர்ந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை திருச்சி ஆயுதப்படை மைதானத்தில்  உள்ள உயிர்நீத்தோர் நினைவுத்தூணுக்கு  மத்திய மண்டல (திருச்சி) காவல்துறைத் தலைவர் வரதராஜூ, துணைத் தலைவர் லலிதா லட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், மாநகர காவல் ஆணையர் அ. அமல்ராஜ், துணை ஆணையர்கள் மயில்வாகனன், நிஷா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காவல் படை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி மற்றும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.