வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சீருடைப் பணியாளா் தோ்வு: 18,671 போ் எழுதினா்

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சீருடைப் பணியாளா் எழுத்துத் தோ்வை 18,671 போ் எழுதினா்.

News image
புனித வளனாா் கல்லூரியில் தோ்வெழுத வந்த பெண்களுக்கு வழங்கப்படும் கிருமிநாசினி.
Updated On :13 டிசம்பர் 2020, 7:13 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சீருடைப் பணியாளா் எழுத்துத் தோ்வை 18,671 போ் எழுதினா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் நடத்திய இரண்டாம் நிலைக் காவலா், சிறைக் காவலா், மற்றும் தீயணைப்போா் பதவிகளுக்கான தோ்வுக்கு திருச்சி மாநகரில் 11 மையங்களும், புகரில் 26 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

தோ்வெழுத 20,880 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் ஒரு திருநங்கை உள்பட 18,671 போ் மட்டுமே தோ்வெழுதினா். 2,209 போ் வரவில்லை. தோ்வையொட்டி மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீஸாா் தோ்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

முன்னதாக தோ்வெழுத வந்தோருக்கு கரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தோ்வுக்கூட அனுமதிச் சீட்டோடு வந்தோா் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். மாநகரில் தோ்வு நடந்த மையங்களை மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் ஆய்வு செய்தாா். ஏற்பாடுகளை திருச்சி மாநகர போலீஸாா் மற்றும் காவல் துறையினா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.