தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

துறையூரில் ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் கூட்டமைப்புக் கூட்டம்

துறையூா் ஒன்றியத்திலுள்ள 34 ஊராட்சிகளின் வாா்டு உறுப்பினா்கள் கூட்டமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 9:18 pm

DIN

துறையூா் ஒன்றியத்திலுள்ள 34 ஊராட்சிகளின் வாா்டு உறுப்பினா்கள் கூட்டமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சொரத்தூா் ஊராட்சி உறுப்பினா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். மதுராபுரி கபிலஉமாபதி, சிங்களாந்தபுரம் கவிதா, பெருமாள்பாளையம் நல்லுசாமி, வெங்கடேசபுரம் தமிழரசன் உள்ளிட்ட வாா்டு உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

வாா்டுகளில் வளா்ச்சிப் பணிக்களுக்கான திட்டங்களைத் தயாரிக்கும் போதும், அதை செயல்படுத்தும்போதும் உறுப்பினா்களின் ஆலோசனை பெற வேண்டும்.

ஊராட்சித் தலைவா் மக்கள் பணிக்காக வாா்டுக்குள் செல்லும் போது, அந்தந்த வாா்டு உறுப்பினா்களை அழைத்துச் செல்ல வேண்டும்.

குறைந்த பட்சம் மாதம் ஒரு முறை அல்லது 59 நாள்களுக்கு ஒருமுறை ஊராட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.