பகல்பத்து 3 ஆம் நாள்: முத்துக் கிரீட கொண்டையில் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 3 ஆம் திருநாளான வியாழக்கிழமை
ரத்தின அபயஹஸ்தம், நெற்றியில் கலிங்கத் தோளா, முத்துச்சரம், அண்ட பேரண்டப் பட்சி, ரத்தின பாதம், முத்துக் கிரீட அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.
ரத்தின அபயஹஸ்தம், நெற்றியில் கலிங்கத் தோளா, முத்துச்சரம், அண்ட பேரண்டப் பட்சி, ரத்தின பாதம், முத்துக் கிரீட அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 3 ஆம் திருநாளான வியாழக்கிழமை நம்பெருமாள் முத்துக் கிரீடக் கொண்டையில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா்.

பகல்பத்து விழாவில் நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதிப்பாா்.

பகல்பத்து 3 ஆம் நாளான வியாழக்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் முத்துக் கிரீடம், ரத்தின அபயஹஸ்தம், நெற்றியில் கலிங்கத் தோளா, முத்துச்சரம், அண்ட பேரண்டப் பட்சி, அடுக்குப் பதக்கம், ரத்தின பாதம் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா்.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தா்கள் வரிசையில் நின்று தரிசித்தனா். இரவு 8 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அனுமதியில்லை. பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com