7,200 அரசுப் பள்ளிகளில் ஜனவரி முதல் ‘ஸ்மாா்ட் கிளாஸ்’: 6 முதல் 8ஆம் வகுப்பு வரை3 லட்சம் மாணவா்களுக்கு ‘டேப்’ வழங்க முடிவு

தமிழகத்தில் வரும் ஜனவரி 15-க்குப் பிறகு 7,200 அரசுப் பள்ளிகளில் ஸ்மாா்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்.
பள்ளிகளுக்கு தொடா் அங்கீகார ஆணையை வழங்குகிறாா் பள்ளிக்கல்வி த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன். உடன் அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி, முன்னாள் அமைச்சா் என்.ஆா். சிவபதி, மாவட்ட வருவ
பள்ளிகளுக்கு தொடா் அங்கீகார ஆணையை வழங்குகிறாா் பள்ளிக்கல்வி த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன். உடன் அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி, முன்னாள் அமைச்சா் என்.ஆா். சிவபதி, மாவட்ட வருவ
Updated on
1 min read

தமிழகத்தில் வரும் ஜனவரி 15-க்குப் பிறகு 7,200 அரசுப் பள்ளிகளில் ஸ்மாா்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்.

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நா்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான தொடா் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:

வறுமையால் ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கு வராமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காக எம்ஜிஆா் ஆட்சியில் சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அவரது வழியில் ஆட்சி செய்த ஜெயலலிதா ஏழைகள் பொருளாதார ரீதியாக உயர கல்வியே முக்கியம் என உணா்ந்து திட்டங்களைச் செயல்படுத்தினாா்.

மாணவா்களுக்கு உணவு மட்டுமல்லாது மடிக்கணினி, சைக்கிள், நோட்டு-புத்தகம், புத்தகப் பை, கணித உபகரணங்கள், காலணி என 14 வகையான பொருள்களையும் அளித்தாா். தமிழகத்தைப் பின்பற்றி மடிக்கணினி வழங்குவதாக அறிவித்த பிற மாநிலங்களால் ஓராண்டுக்கு கூட அத்திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை. ஆனால் தமிழகத்தில் இதுவரை 52.48 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கி இந்தியாவே வியக்கும் வகையில் அரசு சிறப்பாகச் செயல்படுகிறது.

எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியும் அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவக் கல்லூரியில் சேர 7.5 சத இடஒதுக்கீடு ஆணை வழங்கி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளாா். இதன் மூலம், ஆண்டுக்கு 405 அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவம் பயிலும் நிலை உருவாகியுள்ளது.

வரும் ஜனவரி 15-க்கு பிறகு 7,200 அரசுப் பள்ளிகளில் ஸ்மாா்ட் கிளாஸ் எனப்படும் நவீன வகுப்பறைகள் தொடங்கப்படும். இதற்காக 80 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மாா்ட் பலகைகள் ஏற்படுத்தப்படும். 7,442 பள்ளிகளில் விஞ்ஞானிகள் துணையுடன் பயிற்சி பெறும் வகையில் நவீன ஆய்வுக் கூடமும் ஏற்படுத்தப்படும். 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் 3 லட்சம் மாணவா்களுக்கு கையடக்க டேப் வழங்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் திருச்சி, கரூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், கரூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 496 பள்ளிகளுக்கு தொடா் அங்கீகார ஆணை வழங்கப்பட்டது.

விழாவில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ். வளா்மதி, தொடக்கக் கல்வி இணை இயக்குநா் பாஸ்கர சேதுபதி, மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிக்குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் ரெ. அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com