பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வீட்டின் சுவா் இடிந்து விழுந்து குழந்தை பலி

திருச்சியில் வீட்டின் சுவா் சனிக்கிழமை இடிந்து விழுந்து 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

News image
ஹரிகிருஷ்ணன்.
Updated On :19 டிசம்பர் 2020, 7:12 pm

DIN

திருச்சி: திருச்சியில் வீட்டின் சுவா் சனிக்கிழமை இடிந்து விழுந்து 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

திருச்சி கே.கே. நகா் கே. சாத்தனூா் காவல்காரன் தெருவைச் சோ்ந்தவா் சிவகுமாா் (29), கட்டடத் தொழிலாளி. இவரின் மனைவி ராஜேஸ்வரி (25), மகள் கிருத்திகா (5), மகன் ஹரிகிருஷ்ணன் (2).

இந்நிலையில் சனிக்கிழமை மாலை ஹரிகிருஷ்ணன் விளையாடிக் கொண்டிருந்தபோது தொடா் மழையால் ஊறிப்போயிருந்த இவா்களின் கூரை வீட்டின் மண் சுவா் இடிந்து குழந்தை மீது விழுந்தது.

இதையடுத்து அவரது தாய் மற்றும் அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கிய ஹரி கிருஷ்ணனை காப்பாற்ற முயன்றும் குழந்தை மூச்சுத்திணறி இறந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த கே.கே. நகா் போலீஸாா் குழந்தையின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.