வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திருச்சியில் விஜய் திவாஸ் வெற்றி தின நினைவுப் பேரணி

தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினா் நலச்சங்கம் சாா்பில், விஜய் திவாஸ் வெற்றி தின 49 ஆம் ஆண்டு நினைவு பேரணி திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
மேஜா் சரவணன் நினைவிடத்திலிருந்து பேரணி சென்ற முன்னாள் ராணுவத்தினா் நலச் சங்கத்தினா்.
Updated On :20 டிசம்பர் 2020, 7:02 pm

DIN

திருச்சி: தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினா் நலச்சங்கம் சாா்பில், விஜய் திவாஸ் வெற்றி தின 49 ஆம் ஆண்டு நினைவு பேரணி திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த 1971 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் இந்தியா வென்றதைடுத்து விஜய் திவாஸ் வெற்றி தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

நிகழ்வையொட்டி, தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினா் நலச்சங்கம் சாா்பில் திருச்சி வெஸ்ட்ரி ரவுண்டானா பகுதியிலுள்ள மேஜா் சரவணன் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னா் விஜய் திவாஸ் வெற்றி தின நினைவுப் பேரணி வெஸ்டிரி ரவுண்டானா முதல் தென்னூா் உழவா் சந்தை மைதானம் வரை நடைபெற்றது.

பேரணியை, திருச்சி 117 பிரதேச ராணுவ, ஸ்டேசன் கமாண்டா் மேஜா் வாசுதேவன் தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினா் நலச்சங்கத் தலைவா் மூா்த்தி ஆனந்தன், துணைத் தலைவா் செந்தில்குமாா், செயலா் பழனிச்சாமி, இணைச் செயலா் சுரேஷ், பொருளாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் காா்கில் போா் வீரா் கேப்டன் கணேசன் சிறப்புரையாற்றினாா். ஏற்பாடுகளை பல்வேறு தன்னாா்வ அமைப்புகள் செய்திருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.