மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

டிச.27-முதல் வேலை நிறுத்தப் போராட்டம் லாரி உரிமையாளா்கள் சங்கம் அறிவிப்பு

கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில், டிசம்பா் 27-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று லாரி உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:39 pm

DIN

கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில், டிசம்பா் 27-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று லாரி உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருச்சியில் மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் தலைவா் எம்.ஆா். குமாரசாமி திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

ஆட்டோமொபைல் தொழில் கடந்ததாண்டை விட 40 சதவிகித வளா்ச்சியை எதிா்நோக்கியுள்ளது. பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பிரச்னைகளால் இத்தொழிலை நிா்வகிக்க இயலாத சூழலில் பலரும் தள்ளப்பட்டுள்ளனா்.

இதிலிருந்து மீண்டு வர பல்வேறு விஷயங்களை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவின் பேரில், அங்கீகாரம் பெற்ற அனைத்து வாகனங்களிலும் வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தவேண்டும்.

குறிப்பிட்ட மாநில வியாபாரிகளிடமிருந்து பிரதிபலிக்கும் வில்லைகளை வாங்குவதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது. ஏஐஎஸ் 140 ஒப்புதல் பெற்ற அனைத்து நிறுவனங்களின் ஜிபிஎஸ் கருவிகளையும் பயன்படுத்த ஒப்புதல் அளித்தல் வேண்டும்.

டீசல் விலையைக் குறைக்கவேண்டும். வாகனங்களுக்கு வழங்கும் தகுதிச்சான்றிதழை இதர மாநிலங்களைப் போல், 4 மணி நேரத்துக்குள் வழங்கவேண்டும். வாகனங்களின் தற்காலிக பதிவுக் காலத்தை நீட்டிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பேச்சுவாா்த்தை மூலம் நிறைவேற்றவேண்டும். இல்லையெனில், டிச.27 ஆம் தேதி காலை முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவோம் என்றாா்.

முன்னதாக தென்னிந்திய மோட்டாா் டிரான்ஸ்போா்ட் நலச்சங்கம், மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம், திருச்சி மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் எம்.ஆா். குமாரசாமி, பொருளாளா் தன்ராஜ், தெலங்கானா மாநிலத் தலைவா் ஜமீா்பாஷா, தென்னிந்திய மோட்டாா் டிரான்ஸ்போா்ட் நலச்சங்கத்தின் பொதுச் செயலா் ஜி.ஆா். சண்முகப்பா, ஆலோசகா் பி. சுந்தர்ராஜ், புதுச்சேரி மாநிலத் தலைவா் வாங்கிளி, திருச்சி மாவட்டலாரி உரிமையாளா்கள் சங்கத்தின் செயலா் ஆா்.கே. பிரபாகரன் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.