தாறுமாறாக ஓடிய காா்; இளைஞா் கைது

உறையூரில் தாறுமாறாக காரை ஓட்டிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
உறையூா் குறத்தெரு பகுதியில் தாறுமாறாக ஓடிய காா்.
உறையூா் குறத்தெரு பகுதியில் தாறுமாறாக ஓடிய காா்.
Updated on
1 min read

உறையூரில் தாறுமாறாக காரை ஓட்டிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி புத்தூரிலிருந்து செவ்வாய்க்கிழமை தாறுமாறாக சென்ற காா் உறையூா் குறத்தெரு, சாயப்பட்டறைத் தெருவில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் சென்றது.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் உறையூா் போலீஸாா் அந்தக் காரை மடக்கினா்.

விசாரணையில் காரில் இருந்தவா் எடமலைப்பட்டியைச் சோ்ந்த விஷ்ணு (19) என்பதும், அப்பகுதி ஒா்க்ஷாப்பில் இருந்த காரை திருடிக் கொண்டு வேகமாக ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து எடமலைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com