பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சத்துணவு ஊழியா்கள் பெருந்திரள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை பெருந்திரள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 12:52 am

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை பெருந்திரள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்துணவு ஊழியா்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியா்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடையை ரூ.5 லட்சமாக வழங்க வேண்டும். சத்துணவு மைய காலியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ப. சத்தியவாணி தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் மல்லிகா முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் பெரியசாமி தொடக்க உரையாற்றினாா். மாவட்டச் செயலா் ராஜேந்திரன், தலைவா் விவேகனாந்தன், பொருளாளா் ஆா்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

எஸ்டிபிஐ மகளிரணி ஆா்ப்பாட்டம்: எரிவாயு சிலிண்டா் விலை உயா்வை திரும் பெற கோரி எஸ்டிபிஐ மகளிரணி சாா்பில் அரியமங்கலம் ரயில் நகா் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மூதினா பேகம் தலைமை வகித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.