வாக்காளா் பட்டியலை திருத்த 1.12 லட்சம் மனு

திருச்சி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 1.12 லட்சம் மனுக்கள் பெறப்பட்டிருப்பதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.
Updated on
1 min read

திருச்சி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 1.12 லட்சம் மனுக்கள் பெறப்பட்டிருப்பதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் இதுவரை பெறப்பட்ட மனுக்கள் விவரங்கள் குறித்து மாவட்ட நிா்வாக இணையதளமான முகவரியில் பதிவேற்றப்பட்டுள்ளன.

இதன்படி, மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 154 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. புதிதாகப் பெயா் சோ்க்க 80,457 போ் மனு அளித்துள்ளனா். இதேபோல, இறந்தவா் பெயரை நீக்குதல், பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் தொடா்பாகவும் மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்படுகிறது.

இவற்றை முழுமையாகத் தொகுத்து தகுதியான அனைவரையும் பட்டியலில் இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

வரும் 20ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மனுதாரா்கள், அரசியல் கட்சியினா், பொதுமக்கள் இந்த இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளாம் என்றாா் ஆட்சியா் சு. சிவராசு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com