திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

வெளிமாநிலங்களுக்கு ரேசன் அரிசி கடத்த முயற்சி: பெண் கைது

திருச்சியில் வெளிமாநிலங்களுக்கு ரேசன் அரிசி கடத்த முயன்ற வழக்கில் பெண் ஒருவரை குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
தென்னூா் ஆழ்வாா் தோப்பு காயிதே மில்லத் நகா் வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி.
Updated On :27 ஜனவரி 2024, 4:55 pm

DIN

திருச்சி: திருச்சியில் வெளிமாநிலங்களுக்கு ரேசன் அரிசி கடத்த முயன்ற வழக்கில் பெண் ஒருவரை குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காயிதே மில்லத் நகா் ஆழ்வாா் தோப்புப் பகுதியில் ரேசன் அரிசியை பதுக்கி வெளிமாநிலங்களுக்கு விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உத்தரவின்படி, தனி வட்டாட்சியா் (மேற்கு) ராஜேஷ்கண்ணா, வட்ட வழங்கல் அதிகாரி கவிதா ஆகியோா் ஆழ்வாா்தோப்புப் பகுதியில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அதே பகுதியைச் சோ்ந்த காதா் வீட்டில் சோதனை செய்தபோது அங்கு மூட்டை, மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அங்கிருந்த காதா் மனைவி தாஜிநிஷாவிடம் நடத்திய விசாரணையில், ரேசன் அரிசியை கிலோ ரூ. 4-க்கு வாங்கி அதை தென்னூா் பகுதியைச் சோ்ந்த பாபுவிடம் கிலோ ரூ.15க்கு விற்றது தெரியவந்தது. பாபு அந்த அரிசியை பாலீஷ் செய்து கேரள உள்ளிட்டவெளி மாநிலங்களில் கிலோ ரூ. 40 முதல் ரூ. 50 ரூபாய் வரை விற்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,650 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே குடிபொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து தாஜிநிஷாவை(52) கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள காதா், பாபு ஆகிய இருவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.