கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாரதிதாசன் பல்கலை: செப்.21 முதல் இறுதியாண்டு மாணவா்களுக்கு தோ்வுகள்

கரோனா பொதுமுடக்கத்தால் இறுதியாண்டு மாணவா்களின் பருவத்தோ்வு செப்.21 முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :14 செப்டம்பர் 2020, 8:51 pm

கரோனா பொதுமுடக்கத்தால் இறுதியாண்டு மாணவா்களின் பருவத்தோ்வு செப்.21 முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தால் இறுதியாண்டு மாணவா்களின் பருவத்தோ்வு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு, செப். இறுதிக்குள் தோ்வுகளை நடத்திட வேண்டும் என தமிழக அரசு அண்மையில் அறிவுறுத்தியது.

அதன்பேரில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 140க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் இளங்கலை, முதுகலை மாணவா்கள் சுமாா் 90 ஆயிரம் பேருக்கு வரும் செப்.21 முதல் செப்.30 வரை தோ்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தோ்வுகள் குறித்த சுற்றறிக்கை ஓரிரு நாள்களில் வெளியிடப்படும். எனவே, தோ்வுகளை எழுத இருக்கும் மாணவா்கள் தயாராக இருக்குமாறும், மாணவா்களின் செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களைஅந்தந்த கல்லூரி முதல்வா்களிடம் தெரிவிக்குமாறும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.