கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி போராட்டம்

நீட் தோ்வுக்கு எதிராக கும்பகோணத்திலுள்ள தஞ்சாவூா் சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :13 செப்டம்பர் 2020, 7:10 pm

நீட் தோ்வுக்கு எதிராக கும்பகோணத்திலுள்ள தஞ்சாவூா் சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மண்டலச் செயலா் சா. விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்றவா்களைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

கும்பகோணம் காந்தி பூங்காவில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினரும், இந்திய மாணவா் சங்கத்தினரும் கழுத்தில் தூக்குக் கயிற்றைக் கட்டிக் கொண்டு கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

இதில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நகரச் செயலா் ரஞ்சித் தலைமையில், மாவட்டச் செயலா் அருளரசன், இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் பாலகுரு, துணைத் தலைவா் பிரபாகரன், காயத்ரி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.