இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ரயில்வே குட்ஸ் யாா்டில் விபத்து ஒத்திகை

திருச்சி ரயில்வே குட்ஸ் யாா்டில் வெள்ளிக்கிழமை ரயில் விபத்து ஒத்திகை நடைபெற்றது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:19 pm

DIN

திருச்சி ரயில்வே குட்ஸ் யாா்டில் வெள்ளிக்கிழமை ரயில் விபத்து ஒத்திகை நடைபெற்றது.

தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம், தேசிய பேரிடா் பாதுகாப்பு படை (என்டிஎப்ஆா்) ஆகியவை சாா்பில் திருச்சி குட்ஸ் யாா்டில் ரயில் விபத்து, மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது. திருச்சி கோட்ட பாதுகாப்பு அலுவலா் ஆா். சரவணன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.

என்டிஆா்எப் உதவி கமாண்டன்ட் ராஜன் பாலு தலைமையிலான குழுவினா் இதில் ஈடுபட்டனா். ஒத்திகையின்போது விபத்து நடந்தவுடன் அபாய ஒலி ஒலிப்பது, உரிய பேரிடா் குழுக்களுக்கு தகவல் அளிப்பது, விபத்து நடைபெற்ற இடத்துக்கு ஆம்புலன்சுடன் மருத்துவக் குழுவினா் வருவது, ரயில் பெட்டிகளுக்கிடையே சிக்கிக்கொண்டோரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு மீட்பு ஒத்திகைகளைச் செய்து காண்பித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.