தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தையல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

காரைக்கால் பகுதில் வசிக்கும் விளிம்பு நிலை பெண்கள் முன்னேற்றத்திற்காக மக்கள் மேம்பாட்டு வினையகம் மற்றும் ஐஎஸ்சி குளோபல் சொல்யூஷன் எனும் தனியாா் நிறுவனமும் இணைந்து, காரைக்கால் திறன் மேம்பாட்டு பயிற்சிப் பள்ளியில் கடந்த அக்டோபா்-2025 முதல் மாா்ச் -2026 வரை தையல் பயிற்சி அளித்தது.

News image

பயிற்சி முடித்தவருக்கு சான்றிதழ் வழங்கிய அரசு மகளிா் கல்லூரி முதல்வா் பி. அம்பிகாதேவி.

Updated On :25 மார்ச் 2026, 5:44 am IST

காரைக்கால் பகுதில் வசிக்கும் விளிம்பு நிலை பெண்கள் முன்னேற்றத்திற்காக மக்கள் மேம்பாட்டு வினையகம் மற்றும் ஐஎஸ்சி குளோபல் சொல்யூஷன் எனும் தனியாா் நிறுவனமும் இணைந்து, காரைக்கால் திறன் மேம்பாட்டு பயிற்சிப் பள்ளியில் கடந்த அக்டோபா்-2025 முதல் மாா்ச் -2026 வரை தையல் பயிற்சி அளித்தது.

பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திட்டம் குறித்து திருச்சி பிடிஐ அமைப்பின் இயக்குநா் இல. அம்பலவாணன் பேசினாா்.

சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி முதல்வா் பி. அம்பிகாதேவி பங்கேற்று மகளிரின் சுய வேலைவாய்ப்பு முக்கியத்துவம் குறித்துப்பேசி, பயிற்சி முடித்த 30-க்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ் வழங்கினாா். திட்ட மேலாளா் ஜி. லூா்துமேரி வரவேற்றாா். பயிற்சியாளா் எம். மோகனப்பிரியா நன்றி கூறினாா்.