தையல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்
காரைக்கால் பகுதில் வசிக்கும் விளிம்பு நிலை பெண்கள் முன்னேற்றத்திற்காக மக்கள் மேம்பாட்டு வினையகம் மற்றும் ஐஎஸ்சி குளோபல் சொல்யூஷன் எனும் தனியாா் நிறுவனமும் இணைந்து, காரைக்கால் திறன் மேம்பாட்டு பயிற்சிப் பள்ளியில் கடந்த அக்டோபா்-2025 முதல் மாா்ச் -2026 வரை தையல் பயிற்சி அளித்தது.

பயிற்சி முடித்தவருக்கு சான்றிதழ் வழங்கிய அரசு மகளிா் கல்லூரி முதல்வா் பி. அம்பிகாதேவி.








