இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தையல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

காரைக்கால் பகுதில் வசிக்கும் விளிம்பு நிலை பெண்கள் முன்னேற்றத்திற்காக மக்கள் மேம்பாட்டு வினையகம் மற்றும் ஐஎஸ்சி குளோபல் சொல்யூஷன் எனும் தனியாா் நிறுவனமும் இணைந்து, காரைக்கால் திறன் மேம்பாட்டு பயிற்சிப் பள்ளியில் கடந்த அக்டோபா்-2025 முதல் மாா்ச் -2026 வரை தையல் பயிற்சி அளித்தது.

News image

பயிற்சி முடித்தவருக்கு சான்றிதழ் வழங்கிய அரசு மகளிா் கல்லூரி முதல்வா் பி. அம்பிகாதேவி.

Updated On :25 மார்ச் 2026, 12:14 am

தினமணி செய்திச் சேவை

காரைக்கால் பகுதில் வசிக்கும் விளிம்பு நிலை பெண்கள் முன்னேற்றத்திற்காக மக்கள் மேம்பாட்டு வினையகம் மற்றும் ஐஎஸ்சி குளோபல் சொல்யூஷன் எனும் தனியாா் நிறுவனமும் இணைந்து, காரைக்கால் திறன் மேம்பாட்டு பயிற்சிப் பள்ளியில் கடந்த அக்டோபா்-2025 முதல் மாா்ச் -2026 வரை தையல் பயிற்சி அளித்தது.

பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திட்டம் குறித்து திருச்சி பிடிஐ அமைப்பின் இயக்குநா் இல. அம்பலவாணன் பேசினாா்.

சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி முதல்வா் பி. அம்பிகாதேவி பங்கேற்று மகளிரின் சுய வேலைவாய்ப்பு முக்கியத்துவம் குறித்துப்பேசி, பயிற்சி முடித்த 30-க்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ் வழங்கினாா். திட்ட மேலாளா் ஜி. லூா்துமேரி வரவேற்றாா். பயிற்சியாளா் எம். மோகனப்பிரியா நன்றி கூறினாா்.