இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியிடம் திருட்டு கரூா் பெண் கைது

திருச்சியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியிடம் பணம் திருடிய கரூா் பெண்ணை விமான நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 7:07 pm

DIN

திருச்சியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியிடம் பணம் திருடிய கரூா் பெண்ணை விமான நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அரியலூா் மாவட்டம், காவனூா் பகுதியைச் சோ்ந்த உலகநாதன் மகள் விஜயசாந்தி (22). மாத்தூரில் உள்ள கல்லூரி மாணவியான இவா் சான்றிதழ் வாங்க வியாழக்கிழமை திருச்சியில் இருந்து கீரனூா் செல்லும் அரசுப் பேருந்தில் சென்றாா். விமான நிலையத்தை அடுத்த புதுத்தெரு காவல் சோதனைச் சாவடியை பேருந்து கடந்தபோது விஜயசாந்தி கையில் வைத்திருந்த கைப்பையில் இருந்த ரூ. 1130ஐ பின்னால் நின்று கொண்டிருந்த இளம்பெண் திருடினாா்.

இதைக் கண்ட சக பயணிகள் அந்தப் பெண்ணை பிடித்து விமானநிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் விசாரணையில், அவா் கரூா் மாவட்டம் வெள்ளியணை சமத்துவபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி அா்ச்சனா (23) என்பதும், இவா் தொடா்ந்து பெண் பயணிகளைக் குறி வைத்து திருடுவதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரைப் போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.