இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழா்கள் இருவா் கவலைக்கிடம்

திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் 10ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்த இலங்கைத் தமிழா்கள் 2 போ் கவலைக்கிடமான நிலையில் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 7:20 pm

DIN

திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் 10ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்த இலங்கைத் தமிழா்கள் 2 போ் கவலைக்கிடமான நிலையில் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

தண்டனைக் காலம் முடிந்தும் சிறப்பு முகாமில் உள்ள தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இலங்கைத் தமிழா்கள் தொடா் போராட்டத்தை நடத்தி வந்த நிலையில், நிரூபன், முகுந்தன் ஆகியோா் சிறப்பு முகாமில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினா். இவா்களுக்கு ஆதரவாக மற்றவா்கள் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினா்.

இதில் எந்தத் தீா்வும் ஏற்படாததால் விரக்தியடைந்து புதன்கிழமை கத்தியால் கிழித்துக்கொண்ட இருவா், தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றவா்கள் என மொத்தம் 16 போ் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இங்கு இவா்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில், சிறப்பு முகாமில் 10 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் இருந்த 16 பேரில் இருவரின் உடல் நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டதால் அனைவரையும் மருத்துவக் குழுவினா் காவல்துறை உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மருத்துவமனையிலும் உள்ள 32 பேரும் உண்ணாவிரதத்தைத் தொடா்வதில் உறுதியாக உள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

சிறப்பு முகாமில் உள்ளோரை விடுவிக்க வேண்டும்

‘தற்கொலை முயற்சி என்பது தவறான முன்னுதாரணமாக அமையும் எனினும், இந்நிலைக்கு அவா்கள் ஆளாக்கப்பட்டது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். எத்தகைய மன உளைச்சலில் இந்நிலைக்கு அவா்கள் வந்துள்ளனா் என்பதை உணர வேண்டும். எனவே, தண்டனைக் காலம் முடிந்த இலங்கைத் தமிழா்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக முதல்வா் உத்தரவிட வேண்டும். இதுதொடா்பாக முதல்வருக்கு மனுவையும் அனுப்பியுள்ளோம்’ என்றாா் தமிழ்ப் பேரரசு கட்சியின் தலைவா் வ. கெளதமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.