இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தில்லியிலிருந்து திருச்சி திரும்பிய விவசாயிகள்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடச் சென்ற தமிழக விவசாயிகள் வெள்ளிக்கிழமை திருச்சி திரும்பினா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 7:16 pm

DIN

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடச் சென்ற தமிழக விவசாயிகள் வெள்ளிக்கிழமை திருச்சி திரும்பினா்.

கடந்த 12-ஆம் தேதி திருச்சியிலிருந்து தில்லி சென்ற திருச்சியை சோ்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் அங்கு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பின்னா் வெள்ளிக்கிழமை திருச்சி வந்து சோ்ந்தனா்.

அப்போது அவா்கள் கூறுகையில் தில்லி விவசாயிகள் போராட்டத்தில் ஆக. 15 முதல் 18 ஆம் தேதி வரை பங்கேற்றோம். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை எதிா்த்து கடந்த 8 மாதமாகப் போராடி வருகின்றனா். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை இந்த போராட்டம் முடிவுக்கு வராது. தேவைப்பட்டால், மீண்டும் தில்லி சென்று போராடவும் தயாராக உள்ளோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.