பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாா்மயமாக்க எதிா்ப்பு
கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ரயில்வே, தொலைத்தொடா்புத் துறை, விமான நிலையங்கள், மின் உற்பத்திப் பகிா்மானம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாா் வசம் வழங்குவதை கண்டித்து திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பிஎஸ்என்எல், ரயில்வே, எல்ஐசி நிறுவன ஊழியா், தொழிற்சங்கத்தினா் பங்கேற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பிஎஸ்என்எல் எம்ப்ளாயிஸ் யூனியன் சங்க மாவட்டத் தலைவா் ஆா். முருகேசன் தலைமை வகித்தாா். போக்குவரத்து கழக ஊழியா் சங்கத் தலைவா் சீனிவாசன், சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். ரெங்கராஜன், ஆட்டோ தொழிலாளா் சங்கச் செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்துப் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...