கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

எச்ஐவி பாதித்த சிறாா்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி

சா்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத் துறை, நாட்டு நலப்பணித் திட்டம், ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சாா்பில் எச். ஐ.வி. யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:41 pm

DIN

சா்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத் துறை, நாட்டு நலப்பணித் திட்டம், ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சாா்பில் எச். ஐ.வி. யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் விரிவாக்கத் துறை இயக்குநா் பொ்க்மான்ஸ் தலைமை வகித்தாா். நிகழ்வில் கல்லூரி, உளவியல் துறைத் தலைவா் இம்மானுவேல் ஆரோக்கியம் சிறப்புரையாற்றி, குழந்தைகளின் கேள்விகளுக்கு பதிலளித்தாா். கபிலன் பயிற்சி நிறுவன நிறுவனா் கபிலன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் ஆண்டோனி ஜேசுராஜா, விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளா் ஜோசப் கிறிஸ்து ராஜா ஆகியோா் பேசினா்.

ஏற்பாடுகளை விரிவாக்கத் துறை ஒருங்கிணைப்பாளா்கள் லெனின் , ஜெயசீலன், பூா்ணம் விஸ்வநாதன், பிரபு, பாலாஜி உள்ளிட்டோா் செய்தனா். நிகழ்ச்சிக்கு பிறகு குழந்தைகள் ஜோசப் கல்லூரியின் பழங்கால அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டியின் மண்டல ஒருங்கிணைப்பாளா் கோகுல், எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் உறுதிமொழி வாசிக்க, அனைவரும் ஏற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.