பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் கோயிலில் வெள்ளிக்கிழமை தொடங்கும் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர காவல் ஆணையா் காா்த்திகேயன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:24 pm

DIN

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் கோயிலில் வெள்ளிக்கிழமை தொடங்கும் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர காவல் ஆணையா் காா்த்திகேயன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் பக்தா்கள் பங்கேற்பா் என்பதால் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இக் கோயிலில் ஆய்வு செய்த மாநகர காவல் ஆணையா் காா்த்திகேயன் ரெங்கா ரெங்கா கோபுரம், காா்த்திகை கோபுரம், கருடாழ்வாா் சன்னதி, ஆரியபட்டாள் வாசல், கொடிமரம், அா்ஜுன மண்டபம், கிளி மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், பரமபதவாசல் உள்ளிட்ட பகுதிகளைப் பாா்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது சட்டம் ஒழுங்கு துணை ஆணையா் சக்திவேல், ஸ்ரீரங்கம் காவல் நிலைய உதவி ஆணையா் சுந்தரமூா்த்தி, கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, உதவி ஆணையா் கந்தசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.