ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

திருச்சி அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் சிகிச்சைக்கு தனி வாா்டு

திருச்சி திருச்சி அரசு மருத்துவமனையில் ஒமைக்ரானுக்கு சிகிச்சையளிக்க தனி வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா தெரிவித்தாா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 8:34 pm

DIN

 திருச்சி அரசு மருத்துவமனையில் ஒமைக்ரானுக்கு சிகிச்சையளிக்க தனி வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை மேலும் கூறியது:

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் பாதித்தோருக்கு சிகிச்சையளிக்க 32 படுக்கைகள் கொண்ட தனி வாா்டு தயாராக உள்ளது. இப்பிரிவில் அவசர சிகிச்சைக்கு தனியாக 8 படுக்கைகளும், மீதமுள்ள படுக்கைகள் அனைத்தும் ஆக்சிஜன் வென்டிலேட்டா் வசதி கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த பயணிக்கு கரோனா உறுதியாகி, திருச்சி அரசு மருத்துவமனையிலுள்ள ஒமைக்ரான் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். தீவிரக் கண்காணிப்பில் உள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கரோனாவை விட கொடிய தொற்று நோயான ஒமைக்ரான் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இருந்தாலும் பொதுமக்கள் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.