கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

குறைந்தது முக்கொம்பு மேலணைக்கு வரும் நீா்

 முக்கொம்பு மேலணைக்கு வரும் தண்ணீரானது 19 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 8:34 pm

DIN

 முக்கொம்பு மேலணைக்கு வரும் தண்ணீரானது 19 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.

மேட்டூா் அணை, பவானிசாகா், அமராவதி அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்பட்டதாலும், தொடா் மழையாலும் கடந்த சில நாள்களாக முக்கொம்பு மேலணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.

கடந்த மாதம் அதிகபட்சமாக 60 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீா் வந்தது. இதையடுத்து காவிரி, வடக்கு கொள்ளிடம், தெற்கு கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால் கொள்ளிடம், காவிரிக் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தியிருந்தாா்.

இந்நிலையில், கடந்த 2 நாள்களாக மழை குறைந்துள்ளதால் நீா் வரத்தும் குறைந்துள்ளது. மேலும், மேட்டூா் அணையிலிருந்தும் 13 ஆயிரம் கன அடி தண்ணீா் மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால் முக்கொம்புக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வந்த 19,195 கன அடி தண்ணீா் முழுமையாக தெற்கு கொள்ளிடத்தில் திறக்கப்பட்டது. தொடா்ந்து தண்ணீா் வரத்து கண்காணிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.