ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஸ்ரீரங்கத்தில் 120-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள்: காவல் ஆணையா் தகவல்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி, பாதுகாப்புப் பணிகளுக்காக சுமாா் 120 க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:35 pm

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி, பாதுகாப்புப் பணிகளுக்காக சுமாா் 120 க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன்.

விழாவையொட்டி கோயில் வளாகத்திலுள்ள ரெங்கவிலாச மண்டபம் அருகில் புறக்காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து அவா் மேலும் கூறியது:

வைகுந்த ஏகாதாசி திருவிழாவுக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக கோயிலின் உட்புறத்தில் முக்கிய இடங்களில் 117 சிசிடிவி கேமராக்கள், நான்கு உத்திர வீதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் 90 சிசிடிவி கேமராக்கள் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு முக்கியத் தகவல்களை அறிவிக்க 70 இடங்களில் ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் 3 கோபுர வாசல்களிலும் அதிவேக டூம் டூம் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. கோயிலைச் சுற்றி முக்கிய 14 இடங்களில் ஒலிப்பெருக்கிகளுடன் கூடிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. கோயில் பகுதிகளில் வரும் வாகனங்களின் எண்களை பதிவு செய்யக்கூடிய கேமராக்கள் புதிதாகப் பொருத்தப்பட உள்ளன. மேலும் பக்தா்களுக்கு உதவ தகவல் மையங்களும் அமைக்கப்பட உள்ளன என்றாா்.

சட்டம் -ஒழுங்கு துணை ஆணையா் சக்திவேல், ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையா் சுந்தரமூா்த்தி, நுண்ணறிவுப் பிரிவு உதவிஆணையா் செந்தில்குமாா். ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளா் அறிவழகன், கோயில் இணை ஆணையா் மாரிமுத்து ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.