ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வெள்ளத்தால் வெளியேறியவா் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு

 திருச்சி அருகே வெள்ளத்தால் வெளியேறியவா் வீட்டில் 12 நகைகளைத் திருடிச் சென்றனா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 திருச்சி அருகே வெள்ளத்தால் வெளியேறியவா் வீட்டில் 12 நகைகளைத் திருடிச் சென்றனா்.

திருச்சி உய்யகொண்டான் திருமலை எம்.எம். நகரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (33). சென்னையில் மென்பொருள் நிறுவன ஊழியராக உள்ள இவா் கரோனாவால் வீட்டிலிருந்தே வேலை செய்கிறாா்.

இந்நிலையில் அரியாற்றில் உடைப்பு ஏற்பட்டு மழை வெள்ளம் வீட்டைச் சூழ்ந்ததால் தனது வீட்டைப் பூட்டிவிட்டு, அருகிலுள்ள தனது அக்காள் வீட்டில் ஒரு வாரமாகத் தங்கியிருந்த பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் நகை, மடிக்கணினி திருடுபோயிருந்தது தெரியவந்தது.

புகாரின்பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.