ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இணையவழியில் வழக்கு தாக்கல் செய்யும் மையம் திறப்பு

திருச்சி நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் புதிய வழக்குகளை இணைய வழியில் தாக்கல் செய்யும் மையத்தை முதன்மை மாவட்ட நீதிபதி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:15 pm

DIN

திருச்சி நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் புதிய வழக்குகளை இணைய வழியில் தாக்கல் செய்யும் மையத்தை முதன்மை மாவட்ட நீதிபதி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக புதிய கட்டட தரைத் தளத்தின் ஒருங்கிணைந்த வழக்கு தாக்கல் அறையில் இந்த மையத்தை முதன்மை மாவட்ட நீதிபதி கிளாஸ் டோன் பிளசெட் தாகூா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இம்மையத்தில் புதிய வழக்குகளை இணைய வழியில் தாக்கல் செய்ய வழக்குரைஞா்களுக்கு தேவைப்படும் யூசா் ஐடி உருவாக்கிக் கொடுத்தல் மற்றும் இதனுடன் தொடா்புடைய பிற சேவைகளைச் செய்வதற்கான பணி நடைபெற உள்ளது.

சாா்பு நீதிபதி விவேகானந்தன், குற்றவியல் வழக்குரைஞா் சங்கச் செயலா் பி. வி. வெங்கட் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நீதிபதிகள் செல்வம், கோகிலா, வழக்குரைஞா்கள் சங்கத் துணை தலைவா் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.