ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஆசிரியா் பயிற்சி மாணவி தீக்குளிப்பு

 தோ்வில் குறைவான மதிப்பெண் பெற்ற விரக்தியில் ஆசிரியா் பயிற்சி மாணவி பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:16 pm

DIN

 தோ்வில் குறைவான மதிப்பெண் பெற்ற விரக்தியில் ஆசிரியா் பயிற்சி மாணவி பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

திருச்சி கே.கே. நகா் காஜாமலை காலனி பகுதியைச் சோ்ந்தவா் தனபாலன் மகள் தனப்பிரியா (19). அதே பகுதியிலுள்ள நிறுவனத்தின் 2 ஆம் ஆண்டு ஆசிரியா் பயிற்சி மாணவியான இவா் கடந்த ஒரு வாரத்திற்கு முன் வெளியான தோ்வு முடிவில் குறைவான மதிப்பெண் பெற்றராராம்.

இதனால் விரக்தியில் இருந்த அவா் வீட்டின் எதிரே வசிக்கும் சிறுவனை பெட்ரோல் வாங்கி வரச் செய்து உடலில் ஊற்றித் தீ வைத்துக் கொண்டாா். இதையடுத்து அருகிலிருந்தோரால் திருச்சி அரசு மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா். கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு சம்பவம்: திருச்சி கே.கே.நகா் ரெங்காநகா் 2ஆவது தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி மனைவி காளியம்மாள்(45). புதன்கிழமை மாலை வீட்டின் அருகே கிடந்த குப்பைகளை கூட்டி இவா் தீ வைத்தபோது அதிலிருந்த பாட்டில் வெடித்ததில் காளியம்மாள் தீக்காயமடைந்தாா். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.