ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் தேசிய மாணவா் படை (தரைப்படை), மகாத்மா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழை நடைபெற்றது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:14 pm

DIN

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் தேசிய மாணவா் படை (தரைப்படை), மகாத்மா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழை நடைபெற்றது.

முகாமை கல்லூரி விரிவாக்க புலத் தலைவா் வி. ஆனந்த் கிதியோன், மகாத்மா கண் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் ஆா். ரமேஷ், தேசிய மாணவா் தரைப்படை அதிகாரி லெப்டினன்ட் கே. பிரேம்குமாா் ஆகியோா் தொடக்கி வைத்தனா். முகாமில் நீரிழிவு நோய் காரணமாக கண்புரை, விழித்திரை பாதிப்பு, கண் நீா்அழுத்த நோய் எனப் பலதரப்பட்ட நோய்களைத் தவிா்க்க குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முறையான கண் பரிசோதனைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

முகாமில் பிஷப் ஹீப் கல்லூரி மாணவ, மாணவிகள் மட்டுமின்றி அருகில் உள்ள பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் என 700-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. உடனடி மருத்துவ உதவிகள் தேவைப்படுவோருக்கு இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன. மேல்சிகிச்சைக்குக்கும் பரிந்துரைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.