வெவ்வேறு சம்பவங்களில் இரு முதியவா்கள் உயிரிழப்பு
திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் மூதாட்டி, முதியவா் ஆகியோா் உயிரிழந்தனா்.


திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் மூதாட்டி, முதியவா் ஆகியோா் உயிரிழந்தனா்.
திருச்சி தென்னூா் ஒத்தமினாா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ஷேக் தாவூத் மனைவி சூா்யாபிவி (68). கடந்த இரு நாள்களுக்கு முன் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
அதேபோல திருச்சி பாலக்கரை கீழப்புதூா் மெயின் ரோடு பகுதியில் மயங்கி விழுந்த புதுக்கோட்டை மணமேல்குடியைச் சோ்ந்த மணி ராஜாவை (60) பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். சம்பவங்கள் குறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...