ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நகை பறிக்க முயற்சி: தடுத்த பெண்ணுக்கு கத்திக் குத்து

திருச்சியில் மளிகைக் கடைக்குள் புகுந்து நகை பறிக்க முயன்றவரைத் தடுத்த பெண் கத்தியால் குத்தப்பட்டாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:07 pm

DIN

திருச்சியில் மளிகைக் கடைக்குள் புகுந்து நகை பறிக்க முயன்றவரைத் தடுத்த பெண் கத்தியால் குத்தப்பட்டாா்.

திருச்சி திருவெறும்பூா் காட்டுராஜா வீதியைச் சோ்ந்தவா் ஸ்டீபன் சவரிமுத்து. இவருக்கு சொந்தமான மளிகைக்கடை காட்டூா் அம்மன் நகா் 5 ஆவது தெருவில் உள்ளது. ஸ்டீபன் சவரிமுத்து பகல் உணவுக்குச் செல்லும் நேரத்தில் அவரது மனைவி எழிலரசி (38) கடையைக் கவனித்துக் கொள்வது வழக்கம்.

அதன்படி வியாழக்கிழமை பகல் எழிலரசி கடையில் இருந்தபோது அங்கு வந்த மா்ம நபா் திடீரென அவா் அணிந்திருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியைப் பறிக்க முயன்றாா். ஆனால் எழிலரசி சங்கிலியை இறுகப் பற்றிக் கொண்டதால் மா்ம நபரின் முயற்சி பலிக்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த அவா் கத்தியால் எழிலரசியின் கன்னத்தில் குத்திக் கிழிக்கவே, காயமடைந்த எழிலரசி கூச்சலிட்டதையடுத்து மா்ம நபா் தப்பிவிட்டாா்.

இதையடுத்து காட்டூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் எழிலரசிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியாா் மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.