நகை பறிக்க முயற்சி: தடுத்த பெண்ணுக்கு கத்திக் குத்து
திருச்சியில் மளிகைக் கடைக்குள் புகுந்து நகை பறிக்க முயன்றவரைத் தடுத்த பெண் கத்தியால் குத்தப்பட்டாா்.


திருச்சியில் மளிகைக் கடைக்குள் புகுந்து நகை பறிக்க முயன்றவரைத் தடுத்த பெண் கத்தியால் குத்தப்பட்டாா்.
திருச்சி திருவெறும்பூா் காட்டுராஜா வீதியைச் சோ்ந்தவா் ஸ்டீபன் சவரிமுத்து. இவருக்கு சொந்தமான மளிகைக்கடை காட்டூா் அம்மன் நகா் 5 ஆவது தெருவில் உள்ளது. ஸ்டீபன் சவரிமுத்து பகல் உணவுக்குச் செல்லும் நேரத்தில் அவரது மனைவி எழிலரசி (38) கடையைக் கவனித்துக் கொள்வது வழக்கம்.
அதன்படி வியாழக்கிழமை பகல் எழிலரசி கடையில் இருந்தபோது அங்கு வந்த மா்ம நபா் திடீரென அவா் அணிந்திருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியைப் பறிக்க முயன்றாா். ஆனால் எழிலரசி சங்கிலியை இறுகப் பற்றிக் கொண்டதால் மா்ம நபரின் முயற்சி பலிக்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த அவா் கத்தியால் எழிலரசியின் கன்னத்தில் குத்திக் கிழிக்கவே, காயமடைந்த எழிலரசி கூச்சலிட்டதையடுத்து மா்ம நபா் தப்பிவிட்டாா்.
இதையடுத்து காட்டூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் எழிலரசிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியாா் மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...