கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விடுதி அறையில் இறந்து கிடந்த ஆண், பெண்

துறையூா் பேருந்து நிலைய தனியாா் விடுதி அறையில் ஆண் பெண் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 9:57 pm

DIN

துறையூா் பேருந்து நிலைய தனியாா் விடுதி அறையில் ஆண் பெண் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஏம்பலத்தைச் சோ்ந்த த. சவரீசனும் (22) தாம்பரம் கடப்பேரி தெற்கு குளம் பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் மனைவி நிஷாநந்தினியும் (20) புதன்கிழமை துறையூா் சென்று பேருந்து நிலைய தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கினா்.

வியாழக்கிழமை விடுதி பணியாளா்கள் அந்த அறைக்கு சென்று பாா்த்தபோது கதவு தாழிடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பாா்த்த போது சவரீசனும், நிஷாநந்தினியும் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலின் பேரில் துறையூா் காவல் ஆய்வாளா் (பொ) மோகன்ராஜ் தலைமையிலான போலீஸாா் சடலங்களை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.