பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நலவாழ்வு முகாமுக்குப் புறப்பட்ட 4 யானைகள்

யானைகளுக்கான நலவாழ்வு முகாமில் பங்கேற்க திருச்சியிலிருந்து 4 கோயில் யானைகள் ஞாயிற்றுக்கிழமை காலை லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:15 pm

DIN

யானைகளுக்கான நலவாழ்வு முகாமில் பங்கேற்க திருச்சியிலிருந்து 4 கோயில் யானைகள் ஞாயிற்றுக்கிழமை காலை லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்திர காளியம்மன் கோயிலருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் திங்கள்கிழமை (பிப்.8) தொடங்குகிறது.

இதில் பங்கேற்க திருச்சி மாவட்டத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயில் யானைகள் ஆண்டாள், லட்சுமி, திருவானைக்கா கோயில் யானை அகிலா, மலைக்கோட்டைகோயில் யானை லட்சுமி ஆகியவை சிறப்பு பூஜைகளுக்குப் பின், யாத்ரிநிவாஸ் பயணிகள் தங்கும் விடுதியில் இருந்து லாரிகள் மூலம் புறப்பட்டு சென்றன.

திருச்சி மண்டல இணை ஆணையா் சுதா்சன், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து,திருவானைக்கா கோயில் உதவி ஆணையா் மாரியப்பன்,ஸ்ரீரங்கம் கோயில் உதவி ஆணையா் கந்தசாமி, மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோயில் உதவி ஆணையா் விஜயராணி உள்ளிட்ட கோயில் நிா்வாகிகள் யானைகளை வழியனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.