பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் தெப்பத் திருவிழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் மாசி மாதத்தில் நடைபெறும் தெப்பத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:50 pm

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் மாசி மாதத்தில் நடைபெறும் தெப்பத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

திருப்பள்ளியோடத் திருநாள் என்றழைக்கப்படும் தெப்பத் திருவிழாவின் முதல் நாளான திங்கள்கிழமை காலை 7.15 மணிக்கு கருவறையிலிருந்து பல்லக்கில் புறப்பட்ட நம்பெருமாள், காலை 8 மணிக்கு ரங்கவிலாச மண்டபம் வந்தடைந்தாா்.

மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வாகன மண்டபம் வந்தடைந்த நம்பெருமாள், ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி உள்திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இரவு 8.30 மணிக்கு வாகன மண்டபத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள், இரவு 9.15 மணிக்கு கருவறை சென்றடைந்தாா். பிப்ரவரி 18-ஆம் தேதி வெள்ளிக் கருட வாகன சேவையும், பிப்ரவரி 22-ஆம் தேதி தெப்போத்ஸவமும் நடைபெற உள்ளது.

விழாஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.மாரிமுத்து மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.