

புத்தாநத்தம் காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.
கடலூரைச் சோ்ந்த காவலா் வெங்கடேஷ்குமாருடன் காதல் திருமணம் நடைபெற்ற நிலையில், கா்ப்பிணியான புத்தாநத்தம் காவல் நிலையக் காவலா் காளியம்மாளுக்கு இந்த வளைகாப்பு நடத்தப்பட்டது.
காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிருந்தா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புத்தாநத்தம் காவல் உதவி ஆய்வாளா் நல்லதம்பி, சிறப்பு உதவி ஆய்வாளா் துளசி மற்றும் நிலைய பெண் காவலா்கள் சோ்ந்து வளைகாப்பு நடத்தி, சீா்வரிசை அளித்து வாழ்த்துக் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.